×

நெல்லை அருகே தந்தை, மகளை தாக்கியவர் கைது

களக்காடு, நவ.15:நாங்குநேரி அருகே விஜயநாராயணம் அடுத்த பதைக்கம் கிராமத்தை சேர்ந்த சுடலை மகன் இசக்கி (45). விவசாயி. இவரது மகன் முருகன், அதே ஊரைச் சேர்ந்த வேல்முருகனின் மகன் முத்துசரவணனுடன் (23) ஒரே பைக்கில் சுற்றி வந்ததை கண்டித்தார். இதில் ஏற்பட்ட தகராறில் இசக்கியை கட்டையால் தாக்கிய முத்துசரவணன், மேலும் இதை தடுக்கவந்த இசக்கியின் மகளையும் தாக்கினார். இதில் காயமடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த விஜயநாராயணம் போலீசார், முத்துசரவணனை கைது செய்தனர்.

The post நெல்லை அருகே தந்தை, மகளை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kalakkad ,Sudala ,Izaki ,Padaikam ,Vijayanarayanam ,Nanguneri ,
× RELATED கிறிஸ்டோபர் கல்லூரி சார்பில் களக்காட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு